உஷார் நடவடிக்கை எடுக்கிறது மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆந்த்ராக்ஸ் நோய் பரவினால் அதைச் சமாளிக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தயாராகஉள்ளது என்று மத்திய நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.பி. தாக்கூர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் பேசியதாவது:
போர் நடந்து கொண்டிருக்கும் பகுதிக்கு அருகில் நாம் இருப்பதால், ஆந்த்ராக்ஸ் தாக்குதலுக்கு நாம் எளிதில்இலக்காக வாய்ப்புள்ளது.
அப்படியும் ஆந்த்ராக்ஸ் நோய் பரவினால், அதைத் தடுப்பதற்கு அனைத்து வழிகளையும் மத்திய அரசுமேற்கொள்ள உள்ளது.
அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த நோயைக் கண்டுபிடிப்பதற்கான மருத்துவ வசதிகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.
இந்நோயைத் தடுப்பதற்கான மருந்துகளும் எளிதில் கிடைக்குமாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்தாக்கூர்.












Click it and Unblock the Notifications