போயஸ் கார்டனைக் காலி செய்தார் ரஜினி
சென்னை:
சென்னையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசிக்கும் போயஸ் கார்டனில் உள்ள வீட்டை ரஜினிகாலிசெய்துவிட்டு கேளம்பாக்கத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.
கடந்த 1996ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கும், ஜெயலலிதாவுக்கும் எதிராகக் குரல் கொடுத்துதிமுக கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் நடிகர் ரஜினிகாந்த்.
அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியின்போது போயஸ் கார்டனில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்துவந்ததால்,பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் அந்த வழியாகச் செல்லும் ரஜினியின் காரும் பயங்கரமானசோதனைக்குட்படுத்தப்படுவது வழக்கம்.
இதுபோன்ற நடவடிக்கைகளால் வெறுப்படைந்த ரஜினி தற்போது மீண்டும் அதிமுக ஆட்சி வந்திருப்பதால்,ஜெயலலிதா முதல்வராக இல்லாவிட்டாலும் கெடுபிடிகள் அதிகரித்திருப்பதால் கடும் அதிருப்திக்குள்ளாகிஇருக்கிறார் என்று தெரிகிறது.
இதையடுத்து அவர் தற்போது கேளம்பாக்கத்தில் அவர் ஓய்வு எடுக்கப்பயன்படுத்தும் பண்ணை வீட்டுக்குகுடிபெயர்ந்துள்ளார். மேலும் அங்கேயே நிரந்தரமாகத் தங்கவும் முடிவெடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications