டான்சி வழக்கு: பத்திரத்தில் இருப்பது ஜெ. கையெழுத்துதானா? - நீதிபதி
சென்னை:
டான்சி நிலம் விற்கப்பட்ட பத்திரத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்து உள்ளதா என்று அரசு தரப்பு வக்கீலுக்குநீதிபதி கேள்வி தொடுத்தார். அரசு வக்கீலின் வாதத்திற்கு, நீதிபதி பதில் கேள்விகள் கேட்டார். அதற்கும் அரசுவக்கீல் பதிலளித்தார்.
டான்சி நில ஊழல் வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாஅப்பீல் மனு தாக்கல் செய்தார். இந்த அப்பீல் மனு மீதான விசாரணை நீதிபதி தினகர்முன் நடந்து வருகிறது.
நேற்று (வியாழக்கிழமை)12வது நாளாக விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.
டான்சி நில விற்பனை பத்திரத்தில் ஜெயலலிதா கையெழுத்து போட்டுள்ளதற்கான ஆதாரம் உள்ளதா என்று அரசுசிறப்பு வக்கீல் வெங்கபதியிடம் கேள்வி எழுப்பினார் நீதிபதி தினகர்.
இதற்கு பதிலளித்து வெங்கடபதி கூறுகையில்,
ஜெயலலிதா விற்பனை பத்திரத்தில் தான் கையெழுத்து போடவில்லை என்று மறுத்துள்ளார். ஆனால் அதே சமயம்அந்த பத்திரத்தில் ஜெயலலிதாவின் ஆடிட்டர் ராஜசேகரன் மற்றும் டான்சி பொது மேலாளர் பாலசுப்ரமணியம்ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இரு சாட்சிகளை விசாரித்த போது பத்திரத்தில் உள்ளது ஜெயலலிதா கையெழுத்துதான் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதே சமயம் தான் கையெழுத்து போடவில்லை என்று ஜெயலலிதா மறுப்பு தெரிவிதாலும்பத்திரத்தில் உள்ள விஷயங்களை ஜெயலலிதா மறுக்கவில்லை.
மேலும் இரு சாட்சிகளும் தாங்கள் கையெழுத்து போட்டதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து டான்சி நிலம் வாங்கியதில் சதித்திட்டம் நடந்தது. இந்த சதித்திட்டம் 1991ம் ஆண்டு தீட்டப்பட்டது.டான்சி நிலத்தை மனைகளாக பிரித்து விற்றிருந்தால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்காது என்று வெங்கடபதிவாதிட்டார்.
சதித்திட்டம் நடந்ததாக கூறப்படும் கூட்டத்தில் தலைைமச் செயலாளர்,. தொழில் துறை செயலாளர் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர். ஆனால் 3 செயலாளர்கள் மட்டுமே அரசு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களும்விசாரிக்கப்படவில்லை. டி.ஆர் சீனிவாசன் மட்டும் எப்படி குற்றம் செய்யததாக கூறமுடியும்.
அரசு நிலத்தை ஒருவருக்கே ழுழுவதுமாக விற்றால் அரசுக்கு இழப்பு ஏற்படாது. மேலும் டான்சி நில விற்பனைகுறித்து துணைக்குழு அமைக்கப்பட்டு, டான்சி நில இயக்குனர்கள் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்ட பின்புதான் அரசுமுடிவுக்கு விடப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்காமல் ஒரு சிலர் மட்டும்சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக என்றும் கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு காரசாரமான விவாதம் நடந்தது.