ராமநாதபுரத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு
ராமநாதபுரம்:
தமிழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) உள்ளாட்சி தேர்தலின் இரண்டாவது கட்டவாக்குபதிவின்போது வன்முறையாளர்களை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடுநடத்தினர்.
ராமநாதபுரம், காயல்குடி டவுன் பஞ்சாயத்து தேர்தலில் 2 சுயேட்சைவேட்பாளர்களுக்கு இடையே கள்ள ஓட்டு போட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டது.இதனால் கலவரம் ஏற்பட்டது
கலவர்த்தை அடக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனாலும் கலவரம்அடங்கவில்லை, இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். கலவரகும்பலை முழுவதும் அடக்க வானத்தை நோக்கி சுட்டனர். இதன் பின் கலவரம் அடங்கிநிலைமை கட்டுக்குள் வந்தது. இதில் யாரும் காயமடையவில்லை.
ராமநாதபுரம், முதுகுளத்தூர் செல்வநாயகபுரம் அதிமுக எம்.எல்.ஏவானபதினெட்டான்படியானின் சகோதரர் மகன் ஆறுமுகம். இவர் தன் ஆதரவாளர்களுடன்சென்று கொண்டிருந்போது தாக்கப்பட்டார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை, காவனூர் மற்றும் செல்வனேந்தல் கிராமத்தை சேர்நத் மக்கள் மறுதேர்தல் நடத்தக் கோரி ஜெகதாப்பட்டினத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலின் போது வாக்குப்பதிவுக்காக தேர்தல் பணியாளர்கள் கொண்டுவந்திருந்தபொருட்களை இவர்கள் கைப்பற்ற முனைந்ததால் போலீசார் வானத்தை நோக்கிதுப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பொதுமக்கள் யாரும் காயமடையவில்லை.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை, தென்கரை கிராம மக்கள் தங்கள் ஊரிலிருந்த வாக்கு சாவடியை 3கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வேறு ஒரு கிராமத்திற்கு மாற்றியதை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர் இங்கும் கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுவீசினர்.
திருப்பத்தூர் - தர்மபுரி சாலையில் சேலத்தூர் கிராம மக்கள் மறு வாக்குபதிவுநடத்தக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை கலைந்து செல்லுமாறுபோலீசார் கேட்டுக் கொண்டனர்.
அதை கேட்க மறுத்து மக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களைகலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியதும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள்கலைந்து சென்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி, பழைய பேட்டிையில் கள்ள ஓட்டு போடப்பட்டதை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
தர்மபுரி கடலூர் ஆகிய 2 இடங்களில் வாக்கு பெட்டிகள் சேதப்படுத்தப்பட்டது.கடலூர், திட்டக்குடியில் அருந்ததியர்களும், புளியங்குடியில் ஆதிதிராவிடர்களும்வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் 34 வாக்கு சாவடிகளில் மறுவாக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications