பாகிஸ்தான் கொடியை ஏற்றிய இந்தியப் படை வீரர்!
நாசிக்:
மஹாராஷ்ட்ர மாநிலம் நாசிக் அருகே உள்ள ஒரு தர்காவில் பானிஸ்தானின் தேசிக் கொடியை ஏற்றிய எல்லைப்பாதுகாப்புப் படை வீரர் ஒருவரை பொதுமக்கள் தாக்கினார்கள்.
இந்த தர்காவில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒருவர் பாகிஸ்தான் தேசிய கொடியை ஏற்றினார். இதைப் பார்த்தபொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். பிறகு அந்த நபரைப் பிடித்து கடுமையாகத் தாக்கிய பிறகு போலீசில்ஒப்படைத்தனர்.
போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றுபவர்என்றும், காஷ்மீர் மாநிலத்தில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கிர்கிட் மலையில் வேலை செய்துவருவதாகவும்தெரியவந்தது.
போலீசார் அவரைக் கைது செய்து அவரிடம் இருந்த பாகிஸ்தான் தேசியக் கொடியைக் கைப்பற்றினர்.இச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்தக் கிராமத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டதால், அங்கு போலீஸ் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications