லட்சியங்களை அடுக்குகிறார் திருச்சி புதிய மேயர்
சென்னை:
திருச்சி மாநகரை உயர் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட நகராக மாற்றுவதே தனது முக்கிய லட்சியம் என்று திருச்சிமாநகரின் புதிய மேயரான சாருபாலா தொண்டமான் கூறியுள்ளார்.
திருச்சி நகரின் புதிய மேயராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாருபாலா தொண்டமான் வெற்றிபெற்றுள்ளார். தனது பணிகள் குறித்து சாருபாலா கூறுகையில்,
திருச்சியை உயர் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட நகராக மாற்றத்திட்டமிட்டுள்ளேன். முதல் கட்டமாக திருச்சியில்சாப்ட்வேர் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த பொழுது போக்கு பூங்கா அமைக்கப்படும்.
நகரில் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்க மதுரையில் உள்ளது போல ரிங் ரோடு அமைக்கப்படும்.
திருச்சி காந்தி சந்தை அருகே சரக்கு லாரிகளை நிறுத்தி வைக்க தனி இடம் ஒதுக்கப்படும். நகர் முழுவதிலும்மாணவர்களின் உதவியுடன் மரம் நடப்படும்.
ரூ.120 கோடி செலவில் திருச்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். நகர மக்களின் அடிப்படைவசதிகள் மேம்படுத்தப்படும் என்றார் சாருபாலா.












Click it and Unblock the Notifications