தமிழக மீனவர்களிடம் மீன்களைப் பறித்த இலங்கைக் கடற்படையினர்
இராமேஸ்வரம்:
இராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனர்வர்களை, இலங்கை கடற்படையினர் துப்பாக்கிமுனையில் மிரட்டி அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களைப் பறித்துக் கொண்டனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இராமேஸ்வரத்தில் இருந்து 5 படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச்சென்றனர். அவர்கள் மீன்பிடித்துவிட்டுத் திரும்பும் வழியில், இலங்கைக் கடற்படையினர் அவர்களை வழிமறித்தனர்.
பிறகு அவர்கள் துப்பாக்கிகளைக் காட்டி தமிழக மீனவர்களை மிரட்டி, அவர்களிடமிருந்த மீன்கள் அனைத்தையும்பறித்துக் கொண்டனர்.
மீன்களைப் பறிகொடுத்த மீனவர்கள் சோகமாக இராமேஸ்வரம் கடற்கரையை வந்தடைந்தனர். பிறகு அப்பகுதிமீனவர் சங்கத் தலைவர் தலைமையில் தமிழக கடற்படை அதிகாரிகளைச் சந்தித்து, தங்களுக்கு நேர்ந்த துயரத்தைஎடுத்துக் கூறி, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.
இதுகுறித்து விசாரித்த அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.