கும்பகோணம் அருகே புதருக்குள் தொப்புள் கொடியுடன் கிடந்த ஆண் குழந்தை
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே சாக்கு மூட்டையில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஒரு ஆண் குழந்தைகண்டெடுக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் மேலக்காவேரி கே.எம்.எஸ். நகர் அருகே கருவேலமரக்காடு உள்ளது. அந்தப் பகுதியில்சிறுவர்கள் நேற்று (திங்கள்கிழமை) பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் விளையாடியபந்து அந்தப் பகுதியில் உள்ள முட்புதருக்குள் சென்றது.
அந்தப் பந்தைத் தேடிச் சென்ற சிறுவர்கள் புதருக்குள் ஒரு சாக்கு மூட்டை கிடப்பதையும், அதிலிருந்து குழந்தையின்அழுகைச் சத்தம் கேட்பதையும் அறிந்து அதிர்ந்தனர்.
பிறகு இதுபற்றிஅந்தப் பகுதியைச் சேர்ந்த பெரியவர்களிடம் கூறியதையடுத்து, அப்பகுதி மக்கள் திரளாகச் சென்றுஅந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்தார்கள். அதற்குள் செக்கசெவேல் என்று ஆண் குழந்தை ஒன்று பசியால் கதறிக்கொண்டிருந்தது.
அந்தக் குழந்தையை அப்பகுதியைச் சேர்ந்த சீவல் வியாபாரி சேக் அலாவுதீன் மற்றும் அவரது மனைவி ரஷ்யாபேகம் ஆகியோர் எடுத்து வளர்க்க முன்வந்தனர்.
மேலும் இதுகுறித்துப் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார், பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில்அந்த ஆண் குழந்தையைத் தூக்கி எறிந்தது யார் என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஒருவேளை அந்தக்குழந்தை கள்ளக் காதலில் பிறந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications