இந்திரா காந்தி நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி
டெல்லி:
முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் 17வது ஆண்டு நினைவு நாள் இன்று (புதன்கிழமை) நாடுமுழுவதும் அனுசரிக்கப்பட்டது.
17 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் சீக்கிய தீவிரவாதிகளால் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.
டெல்லியில் இந்திராவின் சமாதி அமைந்துள்ள சக்தி ஸ்தல்லில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவரும்இந்திராவின் மருமகளுமான சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
மேனகா காந்தியின் மகன் வருண் காந்தியும் இந்திரா சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் மற்றும பல தலைவர்கள் இந்திராகாந்தியின் சிலைக்கு மாலைஅணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை-யானைகவுனியில் அமைந்துள்ள இந்திராகாந்தி சிலைக்கு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட பலதலைவர்கள் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை-சிந்தாதிரிபேட்டையில் அமைந்துள்ள இந்திராகாந்தி சிலைக்கு காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன்உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.