தலிபான் ரேடியோவைக் கைப்பற்றியது அமெரிக்கா
காண்டஹார்:
தலிபான்களின் ரேடியோ அலைவரிசையை (Frequency) அமெரிக்கா கைப்பற்றிவிட்டது.
ஆப்கானிஸ்தானில் டிவிக்கு தலிபான்கள் தடை விதித்துவிட்டனர். அரசின் செய்திகள், உத்தரவுகள் எல்லாம்தலிபான்களின் இந்த ரேடியோ மூலம் தான் வெளியிடப்பட்டு வந்தது. உலகத்துக்கும் ஆப்கான் மக்களுக்கும்இருக்கும் ஒரே செய்தித் தொடர்பு ரேடியோதான்.
ஆனால், ஆப்கானிஸ்தானின் அரசு ரேடியோவில் மதப் பிரச்சாரமும் தலிபான் ஆதரவு செய்திகளும் தான்வெளியிடப்பட்டு வந்தன. வேறு நாட்டு ரேடியோ நிகழ்ச்சிகளை, பாடல்களைக் கேட்கும் மக்களுக்கு தலிபான்கள்தண்டனை வழங்கி வருகின்றனர்.
இப்போது தலிபான்கள் வசமிருந்த ஒரே ரேடியோ அலைவரிசையையும் அமெரிக்க ராணுவம் கைப்பற்றிவிட்டது.
இப்போது இந்த ரேடியோ மூலம் ஆப்கானிஸ்தானின் புஷ்தூன் மொழியில் தனது பிரச்சாரத்தை அமெரிக்காதொடங்கியுள்ளது.
பாடல்கள், இசை என மக்களைக் கவரும் அனைத்து நிகழ்ச்சிகளையும் இதில் அமெரிக்கா ஒளிபரப்பி வருகிறது.இடையிடையே தலிபான்களுக்கு எதிராக கிளர்ந்தெழுமாறு மக்களை தூண்டிவிடும் செய்திகளையும் ஒலிபரப்பிவருகிறது.
தலிபான்களிடம் இருந்து விலகி இருக்குமாறு மக்களை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. மேலும் தலிபான்ராணுவத்திலிருந்து விலகிவிடுமாறு வீரர்களுக்கு அறிவுரை கூறுமாறும் மக்களை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த ராணுவத்திடமிருந்து விலகாவிட்டால் சாவு நிச்சயம் என்பதை வீரர்கள் உணர வேண்டும் என அமெரிக்காஎச்சரித்துள்ளது.
ஆனால், இந்த அமெரிக்கப் பிரச்சாரத்தை மக்கள் நம்பவில்லை என தலிபான்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications