பாகிஸ்தான்: கைப்பற்றிய சாலையைத் திருப்பிக் கொடுத்த தலிபான் ஆதரவாளர்கள்
இஸ்லாமாபாத்:
கடந்த ஐந்து நாட்களாகத் தங்கள் கைவசத்தில் வைத்திருந்த ஒரு நெடுஞ்சாலையை பாகிஸ்தானைச் சேர்ந்ததலிபான் ஆதரவாளர்கள் தற்போது அந்தச் சாலையை விட்டு அகன்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தாக்குவதை நிறுத்த வேண்டும் என்று கோரி பாகிஸ்தான் ஆதிவாசிகளான இந்ததலிபான் ஆதரவாளர்கள் ஐந்து நாட்களுக்கு முன் இந்த நெடுஞ்சாலையைக் கைப்பற்றினர்.
இதனால் இரு புறத்திலும் 500 கிலோமீட்டர் தூரத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் இச்சாலையைக் கடக்கமுடியாமல் தேங்கிக் கிடந்தன.
அமெரிக்காவுக்கு அளித்து வரும் ஆதரவை பாகிஸ்தான் விலக்கிக் கொள்ளாதவரை இந்த சில்க் ரோட்டைவிடமாட்டோம் என்று ஆதிவாசிகள் அடம்பிடித்து வந்தனர்.
ஆனால் அமைதியான பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்கள் அந்த நெடுஞ்சாலையை விடுவித்துள்ளனர். தற்போதுகரகோரம் நெடுஞ்சாலை போக்குவரத்திற்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது.
சில்க் ரோடு முழுவதும் தற்போது பாராமிலிட்டரியைச் சேர்ந்த பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிகளுடன் நடமாடிவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications