பாகிஸ்தான் படைகள் குவிப்பு: எல்லையில் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

ஜம்மூ:

இந்திய எல்லையின் அருகே 10 கி.மீ. தூரத்தில் தனது படைகளை பாகிஸ்தான் குவித்துள்ளது. காஷ்மீரிலும்ராஜஸ்தானிலும் இந்தப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 50,000 ராணுவ வீரர்கள் எல்லைக்கு அருகே குவிந்தவண்ணம் உள்ளனர்.

எல்லைக்கு மிக அருகில் பாகிஸ்தானிய விமானப் படை விமானங்கள் அடிக்கடி பறந்து சென்ற வண்ணம் உள்ளன.இதனால், எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

டாங்கிகள், கவச வாகனங்கள் ஆகியவை 3 நாட்களுக்கு முன் 40 முதல் 25 கி.மீ. தூரத்தில் இருந்தன. இப்போதுஇவை எல்லையில் இருந்து 10 தூரத்தை நெருங்கியுள்ளன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் அமைந்திருக்கும் தீவிரவாதிகளின் முகாம்களை இந்தியாதாக்க வேண்டும் என்ற கருத்துக்கு இந்தியாவில் ஆதரவு பெருகி வருகிறது.

அமெரிக்காவை ஆதரிப்பதால் நாடு முழுவதும் மக்களின் கடும் எதிர்ப்புக்கு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ்முஷாரப் ஆளாகியுள்ளார். தனது உள் நாட்டுப் பிரச்சனையில் இருந்து மக்களை திசை திருப்பவும், இந்தியராணுவம் தீவிரவாதிகளின் முகாம்களைத் தாக்குவதைத் தடுக்கவும் இந்தியாவுக்கு எதிராக முஷாரப் படைகளைநிறுத்தி வருவதாகக் கருதப்படுகிறது.

நவாஸ் ஷெரீபின் ஆட்சி காலத்தில் ராணுவத் தளபதியாக இருந்த முஷாரப் தான், கார்கில் ஊடுவலைத் திட்டமிட்டுநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லையை மிகத் தீவிரமாகக் கண்காணித்து வரும் இந்திய ராணுவம் பதிலுக்குப் படைகளைக் குவிக்கவில்லை.ஆனால், பாகிஸ்தான் ஏதாவது தாக்குதலில் ஈடுபட்டால் பதிலடி தர தயார் நிலையில் ராணுவம் வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக இந்தியா கருதுகிறது.

பரூக் அப்துல்லா கவலை:

எல்லையின் அருகே பாகிஸ்தான் தனது படைகளைக் குவித்துள்ளது குறித்து கவலை தெரிவித்துள்ள காஷ்மீர்முதல்வர் பரூக் அப்துல்லா, மீண்டும் ஒரு கார்கில் போருக்கு பாகிஸ்தான் தயாாகி வருகிறது என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+