பொன்னையனுக்கு கருணாநிதி சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விவசாயிகளின் நெல்லை உரிய விலையோடு, முடிந்தவரை அவர்களிடமிருந்து வாங்க வேண்டும் என தமிழகநிதியமைச்சர் பொன்னையனுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.

தமிழக நிதியமைச்சர் பொன்னையன், திமுக ஆட்சிக்காலத்தில் தான் தேவைக்கதிகமாக நெல்லை வாங்கி, அரசுபணம் வீணடிக்கப்பட்டது என்றும், தமிழகத்தில் தீவிரவாதம் வளர திமுக தான் காரணம் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) திமுக தலைவர் கருணாநிதி ஒருஅறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,

திமுக ஆட்சிக்காலத்தில் விவசாயிகளின் நெல்லை உரிய விலைக்கு , தேவைக்கு அதிகமாக வாங்கப்பட்டது என்றுபொன்னையன் கூறியிருக்கிறார். விவசாயிகளின் நெல்லை, அரசின் தேவைக்கேற்ப மட்டும் வாங்கினால், பிறகுவிவசாயிகளின் கதி என்னாவது?.

ஜெயலலிதாவுக்கு , இ-மெயிலில் கொலை மிரட்டல் வருவதற்கு காரணம், திமுக ஆட்சியில் வளர்த்துவிடப்பட்டதீவிரவாதம் என்றிருக்கிறார். இந்த மிரட்டலில் ஈடுபட்ட தமிழ்நாடு விடுதலைப்படை என்ற அமைப்பைதடைசெய்ய வேண்டும் என்று திமுக கூறுகிறது. இதற்கு அதிமுக சார்பில் தடைசெய்யலாம் என்று பொன்னையன்சொல்லத் தயாரா?.


அதிமுக ஆட்சிக் காலத்தில் நேரு ஸ்டேடியம் கட்டப்பட்டபோது, டெண்டர் கோரப்படாமலேயே காண்டிராக்ட்விடப்பட்டது அமைச்சருக்குத் தெரியாதா?.

இவ்வாறு கருணாநிதி, அமைச்சர் பொன்னையனுக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+