பொன்னையனுக்கு கருணாநிதி சரமாரி கேள்வி
சென்னை:
விவசாயிகளின் நெல்லை உரிய விலையோடு, முடிந்தவரை அவர்களிடமிருந்து வாங்க வேண்டும் என தமிழகநிதியமைச்சர் பொன்னையனுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.
தமிழக நிதியமைச்சர் பொன்னையன், திமுக ஆட்சிக்காலத்தில் தான் தேவைக்கதிகமாக நெல்லை வாங்கி, அரசுபணம் வீணடிக்கப்பட்டது என்றும், தமிழகத்தில் தீவிரவாதம் வளர திமுக தான் காரணம் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) திமுக தலைவர் கருணாநிதி ஒருஅறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,
திமுக ஆட்சிக்காலத்தில் விவசாயிகளின் நெல்லை உரிய விலைக்கு , தேவைக்கு அதிகமாக வாங்கப்பட்டது என்றுபொன்னையன் கூறியிருக்கிறார். விவசாயிகளின் நெல்லை, அரசின் தேவைக்கேற்ப மட்டும் வாங்கினால், பிறகுவிவசாயிகளின் கதி என்னாவது?.
ஜெயலலிதாவுக்கு , இ-மெயிலில் கொலை மிரட்டல் வருவதற்கு காரணம், திமுக ஆட்சியில் வளர்த்துவிடப்பட்டதீவிரவாதம் என்றிருக்கிறார். இந்த மிரட்டலில் ஈடுபட்ட தமிழ்நாடு விடுதலைப்படை என்ற அமைப்பைதடைசெய்ய வேண்டும் என்று திமுக கூறுகிறது. இதற்கு அதிமுக சார்பில் தடைசெய்யலாம் என்று பொன்னையன்சொல்லத் தயாரா?.
அதிமுக ஆட்சிக் காலத்தில் நேரு ஸ்டேடியம் கட்டப்பட்டபோது, டெண்டர் கோரப்படாமலேயே காண்டிராக்ட்விடப்பட்டது அமைச்சருக்குத் தெரியாதா?.
இவ்வாறு கருணாநிதி, அமைச்சர் பொன்னையனுக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்!












Click it and Unblock the Notifications