போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்?
சென்னை:
போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தை முழுமையாக நடக்காமல் போனதையடுத்து தமிழகத்தில் போக்குவரத்துஊழியர்கள் ஸ்டிரைக்கில் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு தீபாவளி போனஸாக (திமுக ஆட்சிக்காலத்தில்) போக்குவரத்து ஊழியர்களுக்கு 20சதவீதம்வழங்கப்பட்டது. இப்போது அதை விட கூடுதலாக ஊழியர்கள் கேட்கிறார்கள்.
ஆனால் அரசு கடும் -நிதி -நருக்கடியில் இருப்பதால் அது இயலாத கா-ரியம் என்று அரசுத் தரப்பில்தெ-ரிவிக்கப்பட்டது. இதையடுத்து போனஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்-நிலையில் பல்வேறு தொழிற்சங்கப் பிரதி-நிதிகளுடன் அரசு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து அமைச்சர் நயினார் -நாகேந்திரன் கலந்துகொண்டார்.
ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த -நிலையில், புதன்கிழமை காலை மீண்டும் பேச்சுவார்த்தைதொடரும் என்று கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் -நடக்கவில்லை.
தொழிலாளர் சங்கப் பிரதி-நிதிகளுடன் கலந்து பேசாமல் அரசே தன்னிச்சையாக போனஸ் அறிவிப்பைவெளியிட்டால் போராட்டத்தில் இறங்குவோம் என்று திமுக, சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
புதன்கிழமை மாலை வரை போனஸ் குறித்து அரசுத் தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவேதொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் இறங்கும் வாய்ப்பு அதிக-ரித்துள்ளது.












Click it and Unblock the Notifications