நாகர்கோவில்: போராட்டத்தில் ஈடுபட்ட தமாகா எம்.எல்.ஏ கைது
நாகர்கோவில்:
பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுப்பாதை மூடப்பட்டதை எதிர்த்து நாகர்கோவிலில் போராட்டத்தில் ஈடுபட்டதமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏவான குமாரதாஸ் உள்ளிட்ட 100 பேர் இன்று (புதன்கிழமை) போலீசாரால்கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரியில் மாஜிஸ்திரேட்டுகள் வீடு உள்ள சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த பொதுப்பாதை திடீரென மூடப்பட்டது. மாஜிஸ்திரேட்டுகளின் வீடுகள் இருப்பதால் அந்த பாதை மூடப்பட்டதாக காரணம்கூறப்பட்டது.
பொதுப்பாதை மூடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அந்த பாதையை பயன்படுத்த முடியாமல்அவதிக்குள்ளானார்கள். அருகிலுள்ள பகுதிகளுக்கு கூட அவர்கள் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருந்தது.
பொதுப்பாதையை மீண்டும் திறந்துவிட வேண்டும் என்று தமாகா எம்.எல்.ஏ. குமாரதாஸ் கோரிக்கைவிடுத்திருந்தார். இந்த கோரிக்கை ஏற்கப்படாததால் நாகர்கோவிலில் அவர் தமாகா தொண்டர்கள் 100 பேர்புடைசூழ போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து குமராதாசும், அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் 100 பேரும் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications