உள்ளாட்சித் தேர்தல்: நிறுத்தப்பட்ட பகுதிகளில் 19ம் தேதி வாக்குப் பதிவு
சென்னை:
சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகள் காரணமாக, நடத்தி முடிக்கப்படாத உள்ளாட்சித் தேர்தல்கள் வரும் 19ம் தேதிநடத்தப்படும் என்று மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையாளர் பி.எஸ். பாண்டியன் கூறினார்.
இதுகுறித்து சென்னையில் நேற்று (புதன்கிழமை) மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டிருப்பதாவது,
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து, மாநகராட்சித் துணை மேயர், நகராட்சித்துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு கடந்த 31ம் தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
இதில் வேட்புமனுத் தாக்கல் செய்யாமை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஆகியவை காரணமாக நடத்திமுடிக்கப்படாத பகுதிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல்கள் நடத்தப்படும்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு குழுத் தலைவர் தேர்தல் 21ம் தேதியும், வரிவிதிப்புமேல்முறையீட்டுக் குழு உறுப்பினர், நியமனக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் 22ம் தேதியும்நடைபெறும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications