For Daily Alerts
Just In
அரபிக் கடலில் இந்தியா-பிரான்ஸ் கூட்டு போர்ப்பயிற்சி
டெல்லி:
இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் கடற்படையினர் அரபிக் கடலில் இன்று (வியாழக்கிழமை) கூட்டு போர்ப்பயிற்சியை மேற்கொள்ளவுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் இரு நாட்டுக் கடற்படையினரும் மேற்கொள்ளும் இரண்டாவது கூட்டு போர்ப் பயிற்சியாகும்இது.
அந்தமான்-நிகோபார் தீவுகளுக்கு அருகேயுள்ள கடற்பகுதிகளில் சென்ற வாரம் இந்திய-பிரான்ஸ் கடற்படையைச்சேர்ந்த கமாண்டோ வீரர்கள் தீவிர போர் பயிற்சியை மேற்கொண்டனர்.
இந்திய-பிரான்ஸ் கடற்படையினர் மேற்கொள்ளும் ஆறாவது மிகப் பெரிய கூட்டு போர்ப் பயிற்சியாகும் இதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Thursday, November 8, 2001, 5:30 [IST]