For Daily Alerts
Just In
வேனுடன் மோதல்: காரிலிருந்த சிலிண்டர் வெடித்து 3 பேர் சாவு
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் காஸ் சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற காரும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில்சிலிண்டர்கள் வெடித்து காரில் இருந்த 3 பேர் உடல் கருகி இறந்தனர்.
மேட்டுப்பாளையம் ரோட்டில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் இச் சம்பவம் நடந்தது.
இரு வாகனங்களும் மோதிய வேகத்தில் காஸ் சிலிண்டர்கள் வெடித்தன. இதில் காரில் தீப் பிடித்துக் கொண்டது.
காரின் கதவுகள் லாக் செய்யப்பட்டிருந்ததால் வெளியில் இருந்தவர்களால் கதவுகளைத் திறக்க முடியவில்லை.
இதனால் பொது மக்கள் கண் எதிரிலேயே மூவரும் உடல் எரிந்து இறந்தனர்.
Comments
Story first published: Saturday, November 10, 2001, 5:30 [IST]