மக்களைக் காக்கும் மினி பஸ்கள்
மதுரை:
மினி பஸ்கள் இயங்கி வருவதால் சென்னை தவிர மற்ற நகரங்களில் மக்கள் ஓரளவு தப்பினர்.
அரசு போக்குவரத்து ஊழியர்கள் போனஸ் பிரச்சனை காரணமாக இன்று திடீர் போராட்டத்தில் இறங்கியதையடுத்துதமிழகத்தில் பஸ்கள் 95 சதவீதம் இயங்கவில்லை.
டவுன் பஸ்கள், வெளியூர் பஸ்கள், வெளி மாநில பஸ்கள் எதுவுமே ஒடவில்லை.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வெளியூர் செல்ல வேண்டிய பேருந்துகள் இயங்காததால்பஸ் ஸ்டாண்டுகளில் மக்கள் குவிந்து கிடக்கின்றனர்.
ஆனால், டவுன் பஸ்கள் இயங்காததால் ஏற்பட்டுள்ள சிக்கலை மினி பஸ்கள் ஓரளவு தீர்த்து வருகின்றன. இந்த மினிபஸ்கள் நிரம்பி வழிந்தவண்ணம் மக்களை அள்ளிக் கொண்டு சென்று வருகின்றன.
இதனால் மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, திருச்சி போன்ற நகரங்களில் பஸ் ஸ்டிரைக்கிலிருந்து மக்கள்ஓரளவு தப்பியுள்ளனர்.
இந்த மினி பஸ்கள் தனியார்களால் இயக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications