உ.பி.: "கொலை"யானவர்களுக்கு உயிர் "கொடுத்த" சி.பி.ஐ.
டெல்லி:
கொலை செய்யப்பட்டதாக உத்திரப் பிரதேச போலீசாரால் கூறப்பட்ட ஐந்து பெண்கள் உயிருடன் இருப்பதைசி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.
கடந்த ஆண்டு (2000) ஜுன் மாதம் வாரணாசியின் நாரி நிகேதனில் உள்ள ஒரு பெண்கள் காப்பகத்திலிருந்த நீலம்,பூனம், ஜோதி, சோனி மற்றும் மற்றொரு பெண் உள்ளிட்ட 5 பெண்களை கற்பழித்து கொலை செய்ததாககாப்பகத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 7 பேர் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.
நீலம் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாகவும், பூனமும், ஜோதியும் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதாகவும்,ஜோதி தொண்டையை அறுத்து கொலை செய்யப்பட்டதாகவும் மற்றொரு பெண் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துபோனதாகவும் உத்திரபிரதேச போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைத்தது உத்திரபிரதேச அரசு. வழக்கைத் துப்பறிந்த சி.பி.ஐ. கொலைசெய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண்கள் 5 பேரும் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அவர்கள் ஐந்து பேரும் கூறிய வாக்குமூலத்தை பதிவு செய்திருப்பதாகவும் தாங்கள் எடுத்த அவர்களுடையபுகைப்படங்களையும் விரைவில் நீதிமன்றத்தில் சமர்பிக்க உள்ளோம் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications