ரேஷன் கடை ஊழியர்களும் நாளை முதல் ஸ்டிரைக்
சென்னை:
20 சதவிகித போனஸ் கோரி தமிழக சிவில் சப்ளை ஊழியர்கள் நாளை (திங்கள்கிழமை) முதல் காலவரையற்றவேலை நிறுத்ததத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் தொழிலாளர் சங்க ஏ.ஐ.டி.யூ.சி மாநிலத் தலைவர் ஏ.எம்.கோபு, பொதுச் செயலாளர் சி. சந்திரகுமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் பணியாளர்களுக்கு 8.33 சதவிகித போனஸ் மட்டும் வழங்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது. சென்ற ஆண்டு 20 சதவிகிதம் போனஸ் வழங்கப்பட்டது.
தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அரசு ஒருதலைபட்சமாக முடிவெடுத்துள்ளது. 20 சதவிகிதபோனஸ் வழங்கக் கோரி சிவில் சப்ளை ஊழியர்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில்ஈடுபடுகின்றனர்.
காவிரிபாசன கொள்முதல் பகுதியில் உள்ள கொள்முதல் நிலையங்கள் முழுமையாக இயங்காது. மாநிலம்முழுவதுமுள்ள கிடங்குகள், நவீன அரசி ஆலைகள், சிவில் சப்ளைஸ் மூலம் நடைபெறும் நகர்ப்புற நியாய விலைக்கடைகள், அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் அலுவலகங்களும் இயங்காது.
திங்கள்கிழமை அனைத்து தொழிற்சங்கங்களும் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் என்றுஅந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications