சென்னை விமான நிலையத்தில் 11 மணி நேரம் தவித்த பயணிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையிலிருந்து பாங்காக் செல்ல வேண்டிய 130 பயணிகள் விமானத்தில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் 2முறை தரையிறக்கப்பட்டு, 11 மணி நேரத் தாமதத்திற்கு பிறகு வேறு ஒரு விமானத்தின் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதுகுறித்த விவரம் வருமாறு:

சென்னையிலிருந்து பாங்காக் செல்லும் விமானம் வழக்கம் போல நேற்று (சனிக்கிழமை) மாலை 3.30 மணிக்குக்கிளம்பியது. 2 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, அதன் இன்ஜினில் அதிர்வு ஏற்பட்டதால் மாலை 5.30 மணிக்குமீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.

உடனடியாக விமானத்தில் இருந்த 130 பயணிகளும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பு அறையில்தங்கவைக்கப்பட்டனர். பிறகு இன்ஜின் கோளாறு சரிசெய்யப்பட்டு, மீண்டும் இரவு 8.00 மணிக்கு அந்த விமானம்கிளம்பியது.

விமானம் பறந்து கொண்டிருக்கும் போது மீண்டும் இன்ஜினில் அதே பிரச்சனை ஏற்பட்டதால், இரவு 9.00 மணிக்குமீண்டும் சென்னை விமான நிலையத்திலேயே அது பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.

இன்ஜின் கோளாறைச் சரிசெய்வதில் தாமதம் ஏற்பட்டதால், மற்றொரு விமானத்தின் மூலம் அந்த 130பயணிகளும், இன்று அதிகாலை 2.30 மணிக்கு பாங்காக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+