பாகிஸ்தான் அணு மையங்களில் பாதுகாப்பு தீவிரம்
இஸ்லாமாபாத்:
அணுகுண்டுகள் வீசி பதில் தாக்குதல் நடத்தப் போவதாக பின் லேடன் மிரட்டியுள்ளதைத் தொடர்ந்து,பாகிஸ்தானில் உள்ள அணு மையங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப், பின் லேடனிடம்அணுகுண்டு இருப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார். பின் லேடன் அணுகுண்டு வைத்திருப்பதைதாங்கள் நம்பவில்லை என்று அமெரிக்காவும் கூறியுள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுத மையங்கள், அணு உலை மையங்கள், அணு மின் நிலையங்கள்ஆகியவற்றில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அவற்றில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு ராணுவ அதிகாரிகளுக்கு முஷாரப் உத்தரவிட்டுள்ளார். இங்கிருந்து ஒருசிறு பொருளைக் கூட யாரும் வெளியே கொண்டு போக முடியாத அளவுக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுஎன்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எல்லைப் பாதுகாப்புக்காக பாகிஸ்தான் வரும் 6 அமெரிக்க ஹெலிகாப்டர்கள்
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைையை கண்காணிக்க 6 உயர்ரக ஹெலிகாப்டர்களை அடுத்த மாதம்பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அனுப்பவுள்ளது.
ஏ.எச். 64டி ரகத்தைச் சேர்ந்த இந்த ஹெலிகாப்டர்களைத் தவிர, சில விமானங்களையும் அமெரிக்காபாகிஸ்தானுக்கு அனுப்புகிறது.












Click it and Unblock the Notifications