கைதான பஸ் தொழிலாளர்களை விடுவிக்க ராமதாஸ் கோரிக்கை
சென்னை:
பேருந்து ஊழியர் வேலை நிறுதத்தையொட்டி கைது செய்யப்பட்டுள்ள போக்குவரத்துத்துறை தொழிலாளர்களைஉடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார்.
தமிழக அரசுக்கும், போக்குவரத்துத்துறை தொழிற் சங்க பிரமுகர்களுக்கும் இடையில் நடைபெற்ற போனஸ்பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து போக்குவரத்துத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துத்துறை ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளர்.இது தொடர்பாக ராமதாஸ் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகை மற்றும் திருமண காலத்தில் வேலை நிறுத்தம் உருவாகியுள்ள சூழ்நிலையை அரசு தவிர்த்திருக்கவேண்டும். இந்த வேலை நிறுத்தம் காரணமாக அரசுக்கு இழப்பு ஏற்படுவது மட்டுமல்ல, பொதுமக்களும் பெரும்அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
தொழிலாளர்களின் போனஸ் பிரச்சனை குறித்து அரசு நல்ல தீர்வு கண்டு வேலை நிறுத்தத்தை முடிவுக்குகொண்டுவர வேண்டும்.
சென்ற ஆண்டு கொடுக்கப்பட்ட போனசை விட அதிக போனஸ் தரப்பட வேண்டும் என்று தொழிலாளர்கள்எதிர்பார்ப்பது இயற்கைதான். ஆனால் அரசு சென்ற ஆண்டு வழங்கியதை விட குறைவாக போனஸ் வழங்கப்படும்கூறியிருப்பது ஏற்க முடியாதது.
எல்லாவற்றிற்கும் கடந்த ஆட்சி மீது குற்றம் சுமத்தி வருகிறது அதிமுக அரசு. அதிமுக அரசு ஆட்சிக்கு வந்து 6 மாதகாலம் ஆகிறது. நல்ல நிர்வாக திறமையுள்ள ஆட்சியால் எந்த நிர்வாக சீர் கேட்டையும் 6 மாத காலத்தில் சரிசெய்திருக்க முடியும்.
ஆனால் அதிமுக ஆட்சியாளர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் கடந்த ஆட்சி மீதே குற்றம் சுமத்திவருகிறார்கள்.
வேலை நிறுத்தத்தையொட்டி ஏராளமான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்துக்கழக ஓய்வுஅறையில் தங்கியிருந்த தொழிலாளர்களும், பணிமனைகளிலிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரையும் எந்த விதமான நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றுராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications