சென்னை-நெல்லை இடையே தினசரி 3 சிறப்பு ரயில்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதும் போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், கூட்டநெரிசலைத் தவிர்க்க சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு தினசரி 3 சிறப்பு ரயில்களை இயக்க தென்னகரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

சென்னையில் நேற்று முழுவதும் பஸ்கள் ஓடாததால், வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் பெரும்அவதிக்குள்ளாகினர். இவர்கள் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்நிலையங்களில் காத்திருந்தார்கள்.இதையடுத்து சில போலீஸ் பஸ்கள் மூலம் அவர்கள் ஏற்றிச் செல்லப்பட்டனர்.

சென்னையில் பல தனியார் பஸ்கள் இயக்கப்பட்டாலும், அதில் கட்டணங்கள் அதிகமாக இருந்தது.

சில அரசு பஸ்களை டெப்போக்களில் மெக்கானிக்காக வேலைபார்ப்பவர்கள் ஓட்டிச் சென்றனர். இந்த பஸ்களில்கலவரம்த நடக்கலாம் என்று கருதி பொதுமக்கள் பலர் ஏறுவதற்கு பயந்தனர்.

இந்நிலையில் சென்னையிலிருந்து தீபாவளிப் பண்டிகைக்கு வெளியூர்களுக்குச் செல்வதற்கும், வெளியூர்களில்இருந்து சென்னைக்கு வருவதற்கும் தினசரி 3 சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு 11, 12, 13ம் தேதிகளில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.முதல் ரயில் காலை 7.45 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+