தீவிரவாதத்தை எதிர்க்க ஒன்று சேருவோம்: வாஜ்பாய்
நியூயார்க்:
தீவிரவாதத்தை வளர்த்து வரும் சில நாடுகளுக்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒன்று சேர்ந்து போராடவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
தீவிரவாதத்தை அழிக்க ஆப்கான் மீது அமெரிக்கா நடத்திவரும் தாக்குதலுக்கு, இந்தியா முழு ஆதரவு அளித்துவருகிறது. அங்கு தலிபான்களின் ஆட்சியை அகற்றிவிட்டு, புதிய ஆட்சியை விரைவில் ஏற்படுத்த வேண்டும்.
இந்தப் போரை நீண்ட நாட்களுக்கு நடத்திக் கொண்டிருப்பது நல்லதல்ல. ஆப்கானில் புதிய ஆட்சி அமைப்பதில்இந்தியாவின் பங்கும் இருக்க வேண்டும். இந்தியாவுக்கும் ஆப்கானுக்கும் பாரம்பரிய ரீதியான உறவு இருக்கிறது.
இதனால் அங்கு அமையப் போகும் ஆட்சியில், எங்களுக்கு நம்பிக்கையான பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டம்என்று நாங்கள் விரும்புகிறோம். இனிமேல் தீவிரவாதம் அங்கு தலைதூக்காத வகையில் காக்கும் ஒரு புதியவலுவான ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்.
சில நாடுகள் அடுத்த நாட்டிற்குள் தீவிரவாதத்தை வளர்ப்பதையே பெரிய குறிக்கோளாகக் கொண்டுள்ளன. இதைநியாயப்படுத்த அரசியல் மற்றும் மதரீதியான காரணங்களை அவர்கள் சொல்லி வருகிறார்கள்.
இதுபோன்ற செயல்களை நாம் ஆதரிக்கக் கூடாது. இதுபோன்ற நாடுகளுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும்ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்றார் வாஜ்பாய்.












Click it and Unblock the Notifications