300 புதிய பஸ் ஊழியர்கள் தேர்வு: அதிமுகவினருக்கு முன்னுரிமை
சென்னை:
அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு புதிய ஊழியர்களைத் தேர்வு செய்யும்போது, அதிமுகவைச் சேர்ந்தவர்களுக்குமுன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.
அறிவிக்கப்பட்டுள்ள 8.33 சதவிகித போனசுக்குப் பதிலாக ஏற்கனவே வழங்கி வந்த 20 சதவிகித போனஸ்வழங்கப்பட வேண்டும் என்று கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்துவருகின்றனர்.
இதனால் மாநிலம் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனதைத் தொடர்ந்து, புதிய டிரைவர்கள் மற்றும்கண்டக்டர்களைத் தேர்வு செய்யும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
அதிமுக உறுப்பினராக இருப்பவர்களுக்கே அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது. டிரைவிங் லைசென்சும் அதிமுகஉறுப்பினர் கார்டும் இருந்தால் போதும். அவர்கள் உடனடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 170 டிரைவர்களும், 130 கண்டக்டர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு தினக் கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
ஒரு டிப்போவிற்கு 20 பேர் வீதம் இவர்கள் அனைவரும் அனுப்பப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications