1000 சிறைக் கைதிகளை விடுவித்த ஆப்கான் மக்கள்
டெஹ்ரான்:
நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரால் கைப்பற்றப்பட்ட ஹெராட் நகர் சிறைகளிலிருந்த 1000 கைதிகளைஆப்கானிஸ்தான் மக்கள் விடுவித்தனர்.
இந்நிலையில் நேற்று (திங்கள்கிழமை) இரவு ஹெராட் சிறைகளில் புகுந்த ஆப்கானிய மக்கள், சிறைக் கதவுகளைஉடைத்து, அங்கிருந்த 1000க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்தனர்.
ஹெராட் நகரைக் கைப்பற்றிய நார்த்தர்ன் அலையன்ஸ் கமான்டர் இஸ்மாயில் கான்தான் 1992 முதல் 1995 வரைஅந்நகரின் கவர்னராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைப்பற்றிய காபூலைக் காப்பாற்றப் போராடும் எதிர் படையினர்
தாங்கள் கைப்பற்றிய காபூல் நகரத்தை மீண்டும் இழந்து விடாமல் இருப்பதற்காக அந்நகர் முழுவதும் தீவிரபாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர்.
தலிபான்கள் காபூலை விட்டு ஓடியதை அடுத்து, அங்குள்ள மார்க்கெட்டுகளில் புகுந்த அடையாளம் தெரியாதகொள்ளையர்கள் பல்லாயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதனால் காபூல் நகர் முழுவதும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications