துபாயில் தமிழ் இலக்கிய விழா
துபாய்:
ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் இன்டர்நெட் உபயோக்கிக்கும் தமிழர்கள் தங்களுக்கென ஒரு சங்கத்தைத்துவக்கியுள்ளனர்.
தமிழ் நெட்டர்ஸ் அசோஷியேசன் என்ற இந்த சங்கம் தமிழ் இலக்கியத்தையும், தமிழ் கலாச்சாரத்தையும்இன்டர்நெட் மூலமாக பரப்புவதில் பெரும் ஆவல் காட்டி வருகிறது.
எமிரேட்ஸ் தமிழ் கவிஞர்கள் குழுவுடன் இணைந்து இம்மாதம் (நவம்பர்) 9ம் தேதி இலக்கிய விழாவை இந்தசங்கம் நடத்தியது. துபாயில் உள்ள இந்திய விளையாட்டுக் கழகத்தில் இந்த விழா நடந்தது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கவிஞர் அறிவுமதி கலந்து கொண்டார்.
எமிரேட்ஸ் தமிழ் கவிஞர்கள் குழுவின் தலைவர் அப்துல் கதீம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தமிழ் நெட்டர்ஸ் அசோஷியேசன் செயலாளர் ஆசிப் மீரான், துபாயில் உள்ள இந்தியத் தூதரகத்தின் அதிகாரிபொன்னுசாமி, தமிழ் இணையத் தளத்தின் ஆசிரியர் அரசு, தமிழ் ஆர்வலர்களான மணி, தங்கராஜ், சாபு, இசாக்உள்ளிட்டோர் பேசினர்.
இளம் கவிஞர்கள் கவிதை மழை பொழிந்தனர்.












Click it and Unblock the Notifications