பஸ் ஸ்டிரைக்கைக் கைவிட வீரமணி கோக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு விட்டு
உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்,
கடும் நிதி நிலை நெருக்கடியில் இருப்பதால் 8.33 சதவீத போனஸ் தொகையை மட்டுமே தர இயலும் என்று அரசுவிளக்கமாக கூறியுள்ளது.
இருப்பினும் தொடர்ந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் பெதும்பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசின் மற்றும் பொதுமக்களின் நிலையை உணர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு ஊழியர்கள் பணிக்குத் திரும்பவேண்டும்.
போக்குவரத்துக் கழகங்களை லாபத்துடன் இயக்க, ஊழியர்களையும்
பங்குதாரர்களாக்கிக் கொள்வது குறித்து அரசு பசீலிக்க வேண்டும் என்று வீரமணி அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications