தேசிய பாதுகாப்பு: முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை
டெல்லி:
டெல்லியில் நடைபெற உள்ள முதலமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் வாஜ்பாய் தேசிய பாதுகாப்பு நிலவரம் குறித்துவிவாதிக்கவிருக்கிறார்.
தற்போது தீவிரவாதிகள் ஆந்த்ராக்ஸ் போன்ற உயிரியல் மற்றும் ரசாயன தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.இவற்றைத் தடுப்பது குறித்தும், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுப்பது குறித்தும் விவாதிக்கவரும் 16ம் தேதி டெல்லியில் அனைத்து முதல்வர்கள் மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில் 17ம் தேதி பிரதமர்வாஜ்பாய் உரையாற்றுவார்.
இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது,
முதல்வர்கள் மாநாட்டின் போது தீவிரவாதிகள் தற்போது நடத்திவரும் உயிரியல், வேதியல் மற்றும் அணுஆயுதத்தாக்குதல் போன்ற பேரழிவுகளை உண்டாக்கும் தாக்குதல்களை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றிவிவாதிக்கப்படும்.
மேலும் நமது அண்டை நாடான பாகிஸ்தானின் ஆதரவால் காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்டு வரும்எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுப்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படும். மேலும் எல்லைதாண்டியபயங்கரவாதத்தைத் தடுக்க இந்தியத் தரப்பில் என்னென்ன மாற்று முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும்ஆலோசிக்கப்படும்.
மேலும் இவற்றைத் தடுப்பதிலும் எதிர்ப்பதிலும் என்னென்ன புதிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானி தலைமையிலான தேசிய பாதுகாப்புக் குழு சில பரிந்துரைகளை அளித்துள்ளது.
புத்தக வடிவில் மாநாட்டின் தொடக்கத்தில் அனைவருக்கும் கொடுக்கப்படவுள்ள இதில் திட்டமிட்ட சதிகள்,ஊடுறுவல்கள் போன்ற தேசவிரோத செயர்லகளை தடுக்க மாநில அரசுகள், புலனாய்வுத்துறை கடலோரக்காவல்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படைகள் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கும் என்னென்ன அதிகாரங்களைவழங்கலாம் என்று அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது உள்ள சட்டங்களைப் பற்றியும், தீவிரவாதத்தைத் தடுப்பதில் அவற்றை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படும. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆண்டு பிரதமர் கூட்டும் அனைத்து முதல்வர்களின் இரண்டாவது கூட்டமாகும். முதல் கூட்டம் கடந்தஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கூடியது என்பது குறிப்பிடத் தக்கது.












Click it and Unblock the Notifications