பேரணி நடத்த முயன்ற பஸ் ஊழியர்கள் கைதாகி விடுதலை
சென்னை:
சென்னையில் தடையை மீறிப் பேரணி நடத்த முயன்ற ஆயிரக்கணக்கான போக்குவரத்துக் கழக ஊழியர்கள்நேற்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டு, பின்னர் இரவில் விடுதலை செய்யப்பட்டனர்.
போனஸ் கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக் கழக ஊழியர்கள், நேற்று பேரணி நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
ஆனால் போலீசார் இதற்கு அனுமதி மறுத்திருந்தனர். இருந்தாலும் இத்தடையை மீறிப் பேரணியை நடத்துவோம்என்று போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்கள் தெரிவித்தன.
அதன்படி, பேரணி நடத்துவதற்காக நேற்று மாலை சென்னை-அண்ணா சாலையில் உள்ள பல்லவன் இல்லத்தைநோக்கி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சென்றனர்.
அங்கு செல்வதற்கு முன்னதாகவே அவர்களை வழிமறித்து போலீசார் கைது செய்தனர். அனைத்து போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கங்களின் முக்கியப் பிரதிநிதிகளான செளந்தரராஜன், குப்புசாமி, ரங்கராஜன் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களைத் தவிர சென்னை நகர் முழுவதிலும் ஆயிரக்கணக்கான போக்குவரத்துக் கழக ஊழியர்களைப்போலீசார் கைது செய்தனர்.
சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு அவர்களை அழைத்துச் சென்ற போலீசார், அவர்களிடமிருந்துபெயர்-முகவரிகளைப் பெற்றுக் கொண்டு, சில மணி நேரம் கழித்து இரவில் விடுதலை செய்தனர்.