ஜோர்டானைத் தாக்கும் திட்டம் முறியடிப்பு
வாஷிங்டன்:
அமெரிக்க, பிரிட்டன், ஜோர்டன் தூதரகங்களைத் தகர்க்க அல்-காய்தா அமைப்பு மேற்கொண்ட இரு முயற்சிகளைஜோர்டன் நாடு முறியடித்துவிட்டது.
இது தொடர்பாக அக் கும்பல் தொலைபேசியில் பேசிக் கொண்டதை ஜோர்டன் உளவுப் பிரிவினர் இடைமறித்துக்கேட்டனர். அப்போது அக் கும்பல் பயன்படுத்திய பெரிய திருமணம் என்ற வார்த்தை சந்தேகத்தை ஏற்படுத்தியது.
பெரிய தாக்குதலைத் தான் அவர்கள் ரகசியமாக பெரிய திருமணம் என்று குறிப்பிட்டதை அறிந்த ஜோர்டான் தீவிரநடவடிக்கையில் இறங்கியது.
தொலைபேசியில் பேசிய அல்-காய்தா கும்பல் பிடிபட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அமெரிக்க,பிரிட்டன் தூதரகங்களைத் தாக்க இவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
அல்-காய்தா குறித்து அமெரிக்காவுக்கு ஜோர்டனும் இந்தியாவும் மிகப் பெரிய அளவில் ரகசிய தகவல்களைத்தந்து வருகின்றன. இதனால், ஜோர்டனை தீவிரவாதிகள் குறி வைத்ததாகத் தெரிகிறது.