புதுவை: இன்று பெரும்பான்மையை நிரூபிக்கிறார் ரங்கசாமி
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று (புதன்கிழமை) தன்னுடைய கட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்கஉள்ளார்.
புதுவை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரங்கசாமி கடந்த அக்டோபர் 27ம் தேதி புதிய முதல்வராகப்பதவியேற்றார். இதையடுத்து இவருடைய அமைச்சரவையில் மேலும் மூன்று அமைச்சர்கள் கடந்த 11ம் தேதிபதவியேற்றுக் கொண்டனர்.
ரங்கசாமி பதவியேற்றுக் கொண்ட ஒரு மாத காலத்திற்குள் சட்டசபையில் தனது கட்சிக்குள்ள பெரும்பான்மையைநிருபிக்க வேண்டும் என்று அம்மாநில கவர்னர் உத்தரவிட்டிருந்தார்.
30 பேர் கொண்ட பாண்டிச்சேரி சட்டசபையில் 17 எம்.எல்ஏக்களின் ஆதரவு ரங்கசாமிக்கு இருப்பதால்,பெரும்பான்மையை நிரூபிப்பதில் எந்தவிதமான சிக்கலும் அவருக்கு இருக்காது.
காங்கிரஸ் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை அதிமுக கடந்த வாரம் வாபஸ் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications