நாளை பஸ் ஊழியர்கள் பந்த்: முத்துக்கருப்பன் எச்சரிக்கை
சென்னை:
போக்குவரத்துத் தொழிலாளர்கள் நாளை நடத்தப் போவதாக அறிவித்துள்ள பொது வேலை நிறுத்தத்தின் போது,பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ்கமிஷனர் முத்துக்கருப்பன் கூறினார்.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் 20 சதவீத போனஸ் கேட்டுத் தமிழக அரசுக்கு எதிராக நாளை(வெள்ளிக்கிழமை) பொது வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
வேலை நிறுத்தத்தின்போது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தாலோ, வன்முறையில் ஈடுபட்டாலோ கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் அறிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய முத்துக்கருப்பன், பொதுச்சொத்துக்குச் சேதம் விளைவிப்பவர்கள் பஸ் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களும் கைதுசெய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்த வேலை நிறுத்தத்தின்போது, வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீதும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம்ஏற்படுத்துபவர்கள் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஏற்கனவே தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications