For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை ரயில் நிலையத்தில் போலீஸ் உடையில் இருந்த பெண் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீஸ் உடையணிந்து கொண்டு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில்நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணைக் கைது செய்தனர்.

அவர் தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்த விவரம் வருமாறு,

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நிற்கும் பிளாட் பாரத்தில்ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உடையில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தார்.

அவர் மீது சந்தேகமடைந்த ரயில்வே போலீசார் அவரை அழைத்து விசாரித்து, அவர் வைத்திருந்த கைப்பையைச்சோதனை செய்தனர்.

அதில் மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படை வீராங்கனைகளுக்கான அடையாள அட்டை இருந்தது. அதில்அவர் பெயர் பூனம் என்றும், நின்றுகொண்டிருந்த பெண்ணின் புகைப்படமும் இருந்தது.

போலீசார் அவரிடம் விசாரித்ததில், தனது பெயர் ரஷினா என்றும், கேரளாவைச் சேர்ந்தவர் என்றும் அவர்கூறினார். டெல்லியில் ஒரு கல்லூரியில் படித்தபோது பெற்றோரின் எதிர்ப்பை மீறி ராஜிவ் என்பவரைத் திருமணம்செய்துகொண்டதாகவும் அப்போது ரயிலில் அனாதையாகக் கிடந்தது என்று ராஜிவ் கொண்டுவந்து கொடுத்ததுதான் அந்த சப்-இன்ஸ்பெக்டர் யூனிபார்ம் என்று கூறினார்.

தன்னுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் ராஜிவ் பிரிந்து சென்றுவிட்டதாகவும் அவரைத் தேடிவந்தபோது தான்வைத்திருந்த பணம் முழுவதும் செலவழிந்து விட்டது. அதனால் டெல்லிக்கு டிக்கெட் இல்லாமல் செல்வதற்காகபோலீஸ் உடையை உடுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

போலீசார் ரஷினா கூறுவது உண்மையா, அல்லது இவர் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவரா என்று தீவிரமாகவிசாரணை செய்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X