சென்னை ரயில் நிலையத்தில் போலீஸ் உடையில் இருந்த பெண் கைது
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீஸ் உடையணிந்து கொண்டு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில்நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணைக் கைது செய்தனர்.
அவர் தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு,
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நிற்கும் பிளாட் பாரத்தில்ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உடையில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தார்.
அவர் மீது சந்தேகமடைந்த ரயில்வே போலீசார் அவரை அழைத்து விசாரித்து, அவர் வைத்திருந்த கைப்பையைச்சோதனை செய்தனர்.
அதில் மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படை வீராங்கனைகளுக்கான அடையாள அட்டை இருந்தது. அதில்அவர் பெயர் பூனம் என்றும், நின்றுகொண்டிருந்த பெண்ணின் புகைப்படமும் இருந்தது.
போலீசார் அவரிடம் விசாரித்ததில், தனது பெயர் ரஷினா என்றும், கேரளாவைச் சேர்ந்தவர் என்றும் அவர்கூறினார். டெல்லியில் ஒரு கல்லூரியில் படித்தபோது பெற்றோரின் எதிர்ப்பை மீறி ராஜிவ் என்பவரைத் திருமணம்செய்துகொண்டதாகவும் அப்போது ரயிலில் அனாதையாகக் கிடந்தது என்று ராஜிவ் கொண்டுவந்து கொடுத்ததுதான் அந்த சப்-இன்ஸ்பெக்டர் யூனிபார்ம் என்று கூறினார்.
தன்னுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் ராஜிவ் பிரிந்து சென்றுவிட்டதாகவும் அவரைத் தேடிவந்தபோது தான்வைத்திருந்த பணம் முழுவதும் செலவழிந்து விட்டது. அதனால் டெல்லிக்கு டிக்கெட் இல்லாமல் செல்வதற்காகபோலீஸ் உடையை உடுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
போலீசார் ரஷினா கூறுவது உண்மையா, அல்லது இவர் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவரா என்று தீவிரமாகவிசாரணை செய்து வருகின்றனர்.
-
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு












Click it and Unblock the Notifications