தமிழகத்தில் இன்று பந்த்: ஆயிரக்கணக்கானோர் கைது
சென்னை:
பஸ் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளும் பொது வேலை நிறுத்தம்வியாழக்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கியது.
ஆனால், பொது மக்கள் ஆதரவோ, பிற அரசு ஊழியர்களின் ஆதரவோ இல்லாததால் இந்த பந்த் முழுத் தோல்வி அடையும் என்றுதெரிகிறது.
20 சதவீத போனஸ் கேட்டு பஸ் தொழிலாளர்கள் கடந்த 9ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதையடுத்து மாநிலம் முழுவதும் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக போக்குவரத்து கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ்களைக் கொண்டு நிலைமையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள்தோல்வியடைந்துவிட்டன.
அரசுக்கும் போராட்டம் நடத்தும் தொழிலாளர்களுக்கும் இடையே சிக்கி மக்கள் படாதபாடு பட்டு வருகின்றனர்.
இந் நிலையில் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள போக்குவரத்து ஊழியர்கள் இன்று பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்கு திமுக, மதிமுக, பா.ம.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், தலித் கட்சிகள் ஆகியவை ஆதரவுதெரிவித்துள்ளன.
பொது வேலை நிறுத்தத்தின்போது யாராவது வன்முறையில் ஈடுபட்டாலோ, பஸ்களை தடுத்து நிறுத்த முயற்சித்தாலோ, பஸ்களைசேதப்படுத்த முயன்றாலோ அவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு சிறைதண்டனைவிதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாநில டி.ஜி.பி.நெய்ல்வால் கூறினார்.
இவர்கள் தவிர தொழிற்சங்கத்தினர் உள்பட மேலும் 2,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பந்த்தில் இதுவரை வன்முறை சம்பவங்கள் ஏதும் இல்லை. அமைதியாகவே நடந்து வருகிறது. மாநிலம்முழுவதும் கடைகள் வழக்கம் போல் திறந்துள்ளன. அரசு, தனியார் அலுவலகங்கள் இயங்குகின்றன.
பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பொது வேலைநிறுத்தம் பல தொழில் நிறுவனங்களில் துவங்கி விட்டது.இந்த பொது வேலை நிறுத்தத்தை மிகவும் அமைதியாக நடத்த சி.ஐ.டி.யூ., தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்டதொழிற்சங்கங்கள் உறுதியளித்துள்ளன.
கடையடைப்பு இல்லை:
பொது வேலை நிறுத்தத்தில் கடையடைப்பு இருக்காது என்று வணிகர் சங்கங்கள் ஏற்கனவே அறிவித்துவிட்டனர்.
மாநிலம் முழுவதிலும் போலீஸார் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். வன்முறையில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும்உடனடியாக அவர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வன்றை கட்டுக்கடங்காமல் போனால் கடுமையாக நடந்து கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அரசுடன் போனஸ் உடன்பாடு செய்து கொண்டுள்ள 7 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள்வெள்ளிக்கிழமை முதல் பணிக்குத் திரும்புகின்றனர். இதனால் பஸ் போக்குவரத்தில் ஓரளவு சுமூக நிலை ஏற்படும் என்றுதெரிகிறது.
அதிமுக, காங்கிரஸ், தமாகா ஆகிய தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.
இந்தப் போராட்டத்தின் மூலம் அரசைப் பணிய வைக்க மார்க்சிஸ்ட், திமுக ஆதரவு தொழிற்சங்கங்கள் தீவிரமாகியுள்ளன. அதேசமயம், இன்று கூடுதல் பஸ்களை ஓட்டி பொது வேலை நிறுத்தத்தை முறியடிக்க வேண்டும் என்பதில் தமிழக அரசுமும்முரமாகியுள்ளது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications