மதுரையில் பெற்ற பெண் குழந்தையை விற்க முயன்ற தாய்
மதுரை:
ஏற்கனவே 2 பெண் குழந்தைகளைப் பெற்று, அவற்றை விற்ற பெண் தனது மூன்றாவது பெண் குழந்தையை விற்கமுயன்றபோது அதிகாரிகள் தலையிட்டு, அந்தக் குழந்தையை வாங்கி அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில்சேர்த்தனர்.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவனியாபுரத்தில் உள்ளஅரசு மகப்பேரு மருத்துவமனைக்கு குழந்தை பெற்றுக்கொள்வதற்காக வந்தார். வந்து இரண்டு நாட்களில்இவருக்கு 2 கிலோ எடையுள்ள ஒரு அழகான பெண்குழந்தை பிறந்தது.
ஈஸ்வரி இதற்கு முன் தான் பெற்ற 2 பெண்குழந்தைகளை பணத்துக்கு மற்றவர்களிடம் விற்றுள்ளார் என்ற விவரம்மருத்துமனை அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. எனவே ஈஸ்வரிக்குக் குழந்தை பிறந்தவுடன், பகுதி சுகாதாரஆய்வாளர், மற்றும் சுகாதார மையத்தின் டாக்டர் ஆகியாருக்குத் தகவல் கொடுத்தனர்.
அவர்கள் அரசு தொட்டில் குழந்தைத் திட்ட அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து அவர்களை மருத்துவமனைக்குவரவழைத்தனர்.
அதிகாரிகள் அனைவரும் ஈஸ்வரியிடம் சென்று, ஏற்கனவே 2 பெண் குழந்தைகளை பெற்றவுடன் பணத்திற்குவிற்றுள்ளீர்கள். இந்த குழந்தையையும் அப்படி விற்று விடாதீர்கள். எங்களிடம் கொடுத்தால் நாங்கள் அரசுதொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்த்துவிடுவோம் என்றார்கள்.
இதையடுத்து ஈஸ்வரி தான் பெற்றெடுத்த குழந்தையை அதிகாரிகளிடம் வழங்கினாள். அதிகாரிகள் அந்தப்பெண்குழந்தையை வாங்கிக்கொண்டு அரசு தொட்டில் குழந்தைத் திட்டத்தில் பதிவு செய்தனர்.