For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"பொடோ"வை எதிர்த்து தமிழகம், புதுவையில் ஆர்ப்பாட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் பொடோ சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ்உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக மத்திய அரசு தீவிரவாத தடுப்புத் சட்டம் (பொடோ) என்ற புதிய சட்டத்தைஅமல்படுத்த உள்ளது. இந்தச் சட்டத்தில் உள்ள சில பிரிவுகள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மனித உரிமைகளைப்பாதிக்கும் விதத்தில் உள்ளது என்று கூறி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் "பொடோ"சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தின.

திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பத்திரிக்கைத் துறையினருக்கு எதிராக இயற்றப்பட்டுள்ள பொடோசட்டத்திற்கு அனைத்துப் தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஈரோட்டில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தத் தூண்டும் பொடோ சட்டத்தை எதிர்ப்பதாகக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல பாண்டிச்சேரியிலும், பிரதேச காங்கிரஸ் தலைவர் நாரயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X