விலை உயர்வுகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரிசி விலை, பஸ் கட்டணம் மற்றும் மின் கட்டண உயர்வை அறிவித்துள்ள தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் சங்கரையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நேற்று (புதன்கிழமை) அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
அரிசி விலை, பஸ் கட்டணம், மின் கட்டணம் ஆகியவற்றைத் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதனால்பாதிக்கப்படப் போவது நடுத்தர மக்கள் தான்.
மேலும் விற்பனை வரி மற்றும் விவசாயிகள் பயன்படுத்தும் யூரியா போன்றவற்றின் விலையைஉயர்த்தியிருப்பதும் கண்டனத்திற்குரியது.
எனவே உடனடியாக தமிழக அரசு இந்த விலை உயர்வு உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications