மதுரை அருகே 3 பெரிய ரயில் விபத்துக்கள் தவிர்ப்பு
மதுரை:
ரயில்வே ஊழியர்கள் விழிப்புடன் செயல்பட்டதால் மதுரை அருகே 3 ரயில்கள் பெரும் விபத்துகளில் இருந்துதப்பின.
இன்று அதிகாலை 5 மணிக்கு ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் எதுவும் பழுது இருக்கிறதா என்ற வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். மணியாச்சி அருகே உள்ள தண்டவாளத்தில் அவர்கள் சென்றுகொண்டிருந்த போது, இரண்டு தண்டவாளங்களையும் இணைக்கும் பிஸ் பிளேட்டின் நட்டுகளும், போல்ட்டுகளும்காணாமல் போயிருந்தன.
இந்த தண்டவாளத்தில் ரயில் சென்றால் அவை கவிழ்த்துவிடும் என்பதால் உடனடியாக சற்று தூரத்தில்வந்துகொண்டிருந்த சென்னை-திருநெல்வேலி எக்ஸ்பிரசின் டிரைவருக்கு அவசர தகவல் கொடுத்தனர். உடனேஅந்த அந்த ரயில் நிறுத்தப்பட்டது. பிறகு அந்தத் தண்டவாளத்தின் பழுது சரி செய்யப்பட்டவுடன், 2 மணி நேரம்கழித்து ரயில் புறப்பட்டுச் சென்றது.
இதேபோல கொய்லான்-மதுரை எக்ஸ்பிரஸ் இன்று காலை 8 மணிக்கு கங்கைகொண்டான் மற்றும் நாரைக்கிணறுஆகிய ஊர்களுக்கிடையில் வந்துகொண்டிருந்தது. அப்போது அந்தப் பகுதியில் உள்ள தண்டவாளத்தின் குறுக்கே 7அடி நீளமுள்ள தண்டவாளத் துண்டு கிடப்பதைப் பார்த்த ரயில்வே ஊழியர்கள் ரயில் டிரைவருக்குத் தகவல்கொடுத்து அதை நிறுத்தினர். இதனால் பெரிய விபத்துத் தவிர்க்கப்பட்டது.
நேற்று இரவும் இதே தண்டவாளத்தில் ஒரு பெரிய இரும்புத் துண்டு கிடந்ததை ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.இங்கு இரவு 11 மணிக்கு வந்துகொண்டிருந்த சரக்கு ரயிலை வழியிலேயே நிறுத்தி விபத்தைத் தடுத்தனர்.












Click it and Unblock the Notifications