கிரிக்கெட் தேர்வுக் குழு மீது கங்குலி கோபம்
மும்பை:
மொஹாலி கிரிக்கெட் டெஸ்ட்டிற்கான இந்திய அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்யும் போது, தன்னைக்கலந்தாலோசிக்கவில்லை என்று தேர்வுக் குழுவினர் மீது கேப்டன் சவுரவ் கங்குலி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய வீரேந்திர சேவாக் உள்பட 14 பேரைத் தேர்வு செய்த தேர்வுக் குழுவினர், தன்னை ஒரு வார்த்தைகூடக் கேட்கவில்லை என்று கங்குலி இன்று (வெள்ளிக்கிழமை) நிருபர்களிடம் கூறினார்.
"ஒரு கேப்டன் என்ற முறையில் என்னுடைய ஆலோசனையைக் கேட்பதற்காக தேர்வுக் குழுவினர் என்னைஅழைக்கவே இல்லை. இரண்டு நிமிடம் கூட என்னை அழைத்து அவர்களால் பேச முடியாதா?
வீரர்கள் தேர்வின்போது, அந்த அணியின் கேப்டன் கலந்து கொள்ளக் கூடாது என்று புதிதாக எதுவும் "ரூல்" போட்டுவிட்டார்களா?" என்று கோபத்துடன் பேசினார் கங்குலி.
ஆனாலும், இதுபோன்று ஏன் நடந்தது என்று இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் ஜக்மோகன் டால்மியாவிடம்கேட்பேன் என்றும் கூறினார் கங்குலி.
மேலும் தென் ஆப்பிரிக்காவுடன் விளையாடிய பல வேகப்பந்து வீச்சாளர்களை எல்லாம் தற்போது வடிகட்டிஎடுத்துவிட்டனர் என்பதற்காகவும் தேர்வுக் குழுவினர் மீது கங்குலி ஆத்திரப்பட்டார்.