கள், சாராயக் கடைகளைத் திறக்க அரசு திட்டம்
சென்னை:
பெருகி வரும் கள்ளச் சாராய, விஷச் சாராயச் சாவுகளைத் தடுக்கவும், வெளிநாட்டு மது விலை உயர்வுகாரணமாகவும் தமிழகத்தில் மீண்டும் சாராயக் கடைகள் மற்றும் கள்ளுக் கடைகளைத் திறக்க அரசு முடிவுசெய்துள்ளது.
மேலும் இதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்றும் தெரிகிறது.
கடந்த 1969ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது சாராயம் மற்றும் கள்ளுக் கடைகள் திறக்கப்பட்டன. அதைஎதிர்த்து அனைத்து எதிர்க் கட்சிகளும் போராட்டம் நடத்தின. ஆனால் திமுக ஆட்சி இதைக் கண்டுகொள்ளவில்லை.
பின்னர் 1977ம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வராக வருவதற்கு முன் கள், சாராயக் கடைகளைத் திறக்க மாட்டோம் என்றுஉறுதியளித்தார். ஆனாலும் கள்ளச் சாராய மற்றும் விஷச் சாராயச் சாவுகள் பெருகியதையடுத்து, எம்ஜிஆர் தன்கொள்கைகளை மறந்து கள், சாராயக் கடைகளைத் திறந்தார்.
இதற்கும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பி வந்த போதும், எம்ஜிஆர் ஆட்சி முடியும் வரை கள், சாராயக் கடைகள்இயங்கி வந்தன.
இதையடுத்து, 1989ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது, பாக்கெட் சாராயத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் தொடர்ந்து1991ல் வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி, பாக்கெட் சாராயத்தை ஒழித்தார்.
அப்போதிலிருந்து இன்று வரை கள், சாராயக் கடைகள் திறக்கப்படவே இல்லை. ஆனால் விஷச் சாராயச் சாவுகள்மட்டும் அடிக்கடி நடந்து கொண்டே இருந்தன.
அதிலும் கடந்த இரண்டு மாதங்களில் காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அடிக்கடி விஷச் சாராயச்சம்பவங்கள் அடிக்கடி நடந்தன. கிட்டத்தட்ட 100 பேர் வரை இச்சம்பவங்களில் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையே நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு, கடந்த இரு நாட்களுக்கு முன் பலவிலையேற்றங்களையும் கட்டண உயர்வுகளையும் தமிழக அரசு அறிவித்தது.
மதுக் கடைகளில் விற்கப்படும் வெளிநாட்டு மது வகைகளுக்கும் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதனால் ஏழைக்குடிகாரர்கள் இவற்றை வாங்கிக் குடிக்காமல் மீண்டும் கள்ளச் சாராயத்தையும் விஷச் சாராயத்தையும்தான் மீண்டும்நாடிச் செல்வார்கள்.
இதுபோன்ற விஷச் சாராயச் சாவுகளைத் தடுக்கவும், அரசின் வருவாயைப் பெருக்கவும் மீண்டும் கள், சாராயக்கடைகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
சிக்கன நடவடிக்கைக்காக சுவாமிநாதன் தலைமையிலான அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் கமிஷனில் இது குறித்துஅரசு கலந்து ஆலோசித்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் அக்கமிஷனும் இதற்குப் பரிந்துரை செய்யும் என்றேதெரிகிறது.
இதையடுத்து கள், சாராயக் கடைகளைத் திறப்பது தொடர்பான அறிவிப்பு இன்றைக்குள் வெளியிடப்படும் என்றுதெரிகிறது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications