கள், சாராயக் கடைகளைத் திறக்க அரசு திட்டம்
சென்னை:
பெருகி வரும் கள்ளச் சாராய, விஷச் சாராயச் சாவுகளைத் தடுக்கவும், வெளிநாட்டு மது விலை உயர்வுகாரணமாகவும் தமிழகத்தில் மீண்டும் சாராயக் கடைகள் மற்றும் கள்ளுக் கடைகளைத் திறக்க அரசு முடிவுசெய்துள்ளது.
மேலும் இதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்றும் தெரிகிறது.
கடந்த 1969ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது சாராயம் மற்றும் கள்ளுக் கடைகள் திறக்கப்பட்டன. அதைஎதிர்த்து அனைத்து எதிர்க் கட்சிகளும் போராட்டம் நடத்தின. ஆனால் திமுக ஆட்சி இதைக் கண்டுகொள்ளவில்லை.
பின்னர் 1977ம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வராக வருவதற்கு முன் கள், சாராயக் கடைகளைத் திறக்க மாட்டோம் என்றுஉறுதியளித்தார். ஆனாலும் கள்ளச் சாராய மற்றும் விஷச் சாராயச் சாவுகள் பெருகியதையடுத்து, எம்ஜிஆர் தன்கொள்கைகளை மறந்து கள், சாராயக் கடைகளைத் திறந்தார்.
இதற்கும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பி வந்த போதும், எம்ஜிஆர் ஆட்சி முடியும் வரை கள், சாராயக் கடைகள்இயங்கி வந்தன.
இதையடுத்து, 1989ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது, பாக்கெட் சாராயத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் தொடர்ந்து1991ல் வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி, பாக்கெட் சாராயத்தை ஒழித்தார்.
அப்போதிலிருந்து இன்று வரை கள், சாராயக் கடைகள் திறக்கப்படவே இல்லை. ஆனால் விஷச் சாராயச் சாவுகள்மட்டும் அடிக்கடி நடந்து கொண்டே இருந்தன.
அதிலும் கடந்த இரண்டு மாதங்களில் காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அடிக்கடி விஷச் சாராயச்சம்பவங்கள் அடிக்கடி நடந்தன. கிட்டத்தட்ட 100 பேர் வரை இச்சம்பவங்களில் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையே நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு, கடந்த இரு நாட்களுக்கு முன் பலவிலையேற்றங்களையும் கட்டண உயர்வுகளையும் தமிழக அரசு அறிவித்தது.
மதுக் கடைகளில் விற்கப்படும் வெளிநாட்டு மது வகைகளுக்கும் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதனால் ஏழைக்குடிகாரர்கள் இவற்றை வாங்கிக் குடிக்காமல் மீண்டும் கள்ளச் சாராயத்தையும் விஷச் சாராயத்தையும்தான் மீண்டும்நாடிச் செல்வார்கள்.
இதுபோன்ற விஷச் சாராயச் சாவுகளைத் தடுக்கவும், அரசின் வருவாயைப் பெருக்கவும் மீண்டும் கள், சாராயக்கடைகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
சிக்கன நடவடிக்கைக்காக சுவாமிநாதன் தலைமையிலான அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் கமிஷனில் இது குறித்துஅரசு கலந்து ஆலோசித்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் அக்கமிஷனும் இதற்குப் பரிந்துரை செய்யும் என்றேதெரிகிறது.
இதையடுத்து கள், சாராயக் கடைகளைத் திறப்பது தொடர்பான அறிவிப்பு இன்றைக்குள் வெளியிடப்படும் என்றுதெரிகிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications