கொலை வழக்கில் கிருஷ்ணசாமிக்கு ஜாமீன் நிராகரிப்பு
திருநெல்வேலி:
மாஞ்சோலை எஸ்டேட் சூபர்வைசர் கொலை வழக்கில் கைதாகியுள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமியின் ஜாமீன் மனு இன்று (திங்கள்கிழமை) நிராகரிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் 25ம் தேதி கைது செய்யப்பட்ட கிருஷ்ணசாமி தற்போது மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1997ம் ஆண்டு பாளையங்கோட்டையைச் சேர்ந்த தலைமையாசிரியரைக் கொலை செய்த வழக்கில்கிருஷ்ணசாமிக்கு நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
இதற்கிடையே, மாஞ்சோலை எஸ்டேட் சூபர்வைசர் கொலை வழக்கில் தனக்கு ஜாமீன் வேண்டும் என்றுதிருநெல்வேலி செசன்ஸ் நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
இன்று அம்மனுவை விசாரித்த நீதிபதி பானுமதி, அதை நிராகரித்து தீர்ப்பளித்தார்.
இதே கொலை வழக்கு தொடர்பாக கிருஷ்ணசாமி முன்பு ஒருமுறை அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் முன் ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் அவ்வழக்கு சம்பந்தமாக அவர் நீதிமன்றம் அழைத்தும் ஆஜராகவில்லை. இதனால் அவருடைய இந்தஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தன் தீர்ப்பில் கூறியுள்ளார் நீதிபதி பானுமதி.












Click it and Unblock the Notifications