சாராய வியாபாரி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
உளுந்தூர்பேட்டை:
பண்ருட்டி விஷச் சாராயச் சம்பவம் தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்த சாராய வியாபாரிஉளுந்தூர்பேட்டையில் தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இந்த விஷச் சாராயச் சம்பவத்தில் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர்.170க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 50 பேருக்குப் பார்வைபறிபோயுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 4 சாராய வியாபாரிகளைக் கைது செய்துள்ளனர். மேலும் பலரைத்தேடி வந்தனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய சாராய வியாபாரி மொட்டக்காளை என்பவர் தற்கொலை செய்துகொண்டார்.
அவருடைய உடல் உளுந்தூர்பேட்டையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications