மீண்டும் சாராயக் கடைகளைத் திறக்க அரசு முடிவு
சென்னை:
மீண்டும் சாராயக் கடைகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
கள்ளச் சாராய சாவுகளைத் தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம்இன்று மாலை தெரிவித்தார்.
மலிவு விலையில் இந்த சாராயம் விற்கப்படும். இந்த சாராய விற்பனை மூலம் அரசுக்கு ரூ. 350 கோடி கூடுதல்வருமானம் வரும்.
100 மில்லி சாராயம் ரூ. 15 ரூபாய் தான் என்றார் பன்னீர்.
கள்லச் சாராயத்தை ஒழிக்க நடவடிக்கைகளை எடுப்பதை விட்டுவிட்டு சாராயத்தைத் தானே விற்க அரசு முடிவுசெய்திருப்பது அதன் கையாலாகதனத்ததைத் தான் காட்டுகிறது.
முன்பு சாராயக் கடைகள், கள்ளுக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பள்ளிக் கூடங்கள், கோவில்கள்,பஸ் ஸ்டாப்புகள் அருகில் எல்லாம் இந்தக் கடைகள் திறக்கப்பட்டு அப்பாவிகள் ரோட்டில் நடமாட முடியாத நிலைஉருவாகியது. கணவர்களின் குடிப் பழக்கத்தால் பல குடும்பங்கள் நாசமாயின.
மேலும் தெருக்களில் குடிமகன்களின் தொல்லை தலைவிரித்தாடியது.
இதையடுத்து ஒரு வழியாய் இந்தக் கடைகள் மூடப்பட்டன.
ஆனால், இப்போது இந்தக் கடைகளுக்கு மீண்டும் அனுமதி தந்து லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களின்வாழ்வில் விளையாட அரசு முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications