வணிகர் சங்கம், பஸ் ஊழியர்களும் பந்த்திற்கு ஆதரவு
சென்னை:
தமிழகத்தில் பஸ் கட்டணம், மின் கட்டணம், ரேஷன் பொருள் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில்7ம் தேதி நடத்தப்படவுள்ள முழு அடைப்பிற்கு சில போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களும், தமிழக வணிகர்சங்கமும் ஆதரவு அளித்துள்ளன.
தமிழக வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசியல் காரணங்களுக்காக இல்லாமல் மக்கள் நலனுக்காக நடத்தப்படும் பந்த் என்பதால் இதை தமிழக வணிகர்சங்கம் ஆதரிக்க முடிவு செய்துள்ளது.
இருப்பினும் இப்படி அடிக்கடி பந்த் நடப்பதால் அரசின் பொருளாதாரம் மட்டுமல்லாமல் வியாபாகளின்பொருளாதார நிலையும் பாதிக்கப்படும்.
எனவே கட்டண உயர்வுகளைக் குறைப்பது தொடர்பாக அரசு உரிய முடிவை அறிவிக்க வேண்டும். 7ம் தேதிக்குள்அரசு தன் முடிவை அறிவிக்காவிட்டால் எதிர்க் கட்சிகள் நடத்தும் பந்த்தில் வணிகர் சங்கமும் கலந்து கொள்ளும்என்று கூறியுள்ளார் அவர்.
இதேபோல, சி.ஐடியூ, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட பல போக்குவரத்து ஊழியர் சங்கங்களும்பந்த்தில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளன. இதையடுத்து 7ம் தேதி பெரும்பாலான பஸ்கள் ஓடாது என்றுதெரிகிறது.