ஜெ.க்காக சிறப்பு ஆஞ்சநேயர் பூஜை செய்த பன்னீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, டான்சி மற்றும் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளிலிருந்துவிடுவிக்கப்பட்டதையடுத்து சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று முதல்வர் பன்னீர்செல்வம்சிறப்பு பூஜைகள் செய்தார்.

வழக்குகளிலிருந்து ஜெயலலிதா விடுபட்டால் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜைசெய்வதாக முதல்வர் பன்னீர் செல்வம் வேண்டிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

தற்போது டான்சி உள்பட 3 வழக்குகளிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டிருப்பதால், நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு தனது குடும்பத்தினருடன் சென்னைப் புறநகரான நங்கநல்லூரில் உள்ள ஆஞ்சநேயர்கோவிலுக்கு பன்னீர்செல்வம் வந்தார்.

பலத்த பாதுகாப்புடன் வந்த பன்னீர்செல்வம் குடும்பத்தினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர்ஜெயலலிதா பெயரில் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தார் அவர்.

பூஜைகள் முடிந்த பிறகு தரப்பட்ட பிரசாதத்தைப் பெற்றுக் கொண்ட பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+