பலத்த பாதுகாப்புக்கிடையே ரம்ஜான் உற்சாகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரம்ஜான் பண்டிகை தமிழகத்தில் திங்கள்கிழமை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னையில் ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, புதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ளமசூதிகளில் நூற்றுக்கணக்கானவர்கள் காலையில் தொழுகையில் ஈடுபட்டனர்.
நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளிலும் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டன. ரம்ஜான்பண்டிகையையொட்டி சென்னை நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கோவையின் சில பகுதிகளில் வசிக்கும் கேரள மாநில முஸ்லீம்கள் ஞாயிற்றுக்கிழமையே ரம்ஜான் பண்டிகையைகொண்டாடி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள மசூதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications