இன்று மீண்டும் கூடுகிறது மத்திய பாதுகாப்பு கமிட்டி
டெல்லி:
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை மீண்டும் மத்திய பாதுகாப்புக் கமிட்டியின் கூட்டம் நடைபெறவுள்ளது.
பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம்என்ற சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை மீண்டும் மத்திய பாதுகாப்பு கமிட்டிக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கடந்த டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றம் தாக்கப்பட்ட பிறகு நடைபெறும் 8வது பாதுகாப்புக் கமிட்டிக் கூட்டம்இது என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரில் தீவிரவாதம் ஓயும் வரை பாகிஸ்தான் மீது நடவடிக்கை தொடரும் என்று நேற்றைய பாதுகாப்புக்கமிட்டிக் கூட்டத்தில் வாஜ்பாய் கூறியிருந்தார்.
லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகம்மது போன்ற தீவிரவாத அமைப்புகளின் தலைவர்கள் பாகிஸ்தான் அரசால்கைது செய்யப்பட்டிருப்பதையும் இந்தியா வரவேற்றுள்ளது.












Click it and Unblock the Notifications